Posts

அவன்!!

 உறவு என்ற  உரிமை  பேசுகின்றது  அவளோடு !  உரிமை எதுவென   அவளுக்கு தெரியா   அவனோடே !!  

காதலி

காதலி  மாறலாம் மாறாத காதல் தொடரும் வரை...

கவிதை

 கற்பனை தந்தவள் மனைவியானால்  காதல் கற்பனையை சிறைபிடித்தது கணவனை போல்

தேவதை!

கண்ணுக்குத் தெரியாத தேவதை  கூடவே நடக்கிறது விழும் போது தூக்கி விடவும் அழும் போது கண்ணீர் துடைக்கவும்

நரை

வெள்ளை மையில் தலையில் கடவுள் எழுதிய கவிதை நரை!

நம் கையில்!

இதுவும் இன்னொரு  ஆண்டு தான்! வரமோ சாபமோ காலமது  தருவதில்லை... யாவும் எம் எண்ணத்தின் எதிரொலியாம்! 

விடுதலை!

ஒற்றைக் கால் ஊன்றி வான் நோக்கி கைகள் கூப்பி முழு முதல் தனை முணு முணுத்து முற்றும் திறக்க முயன்று கொண்டிருந்தன மரங்கள்! விழுந்து கிடந்த  இலைகளில் விசும்பல் ஏதுமில்லை மண் மீது விழுந்து தொழுகின்றனவோ யாம் அறியோம்!

நிம்மதி!

நீயே நிம்மதி என்றிருந்தேன்.  இன்று நீ இல்லாததால் நிம்மதியாய் இருக்கிறேன்! 

மாயையே!மனசு!!!

 உடைத்தெறிந்ததாய் சொன்ன இதயத்தில் உடைத்திடா உருவம் உடைத்தே சொன்னது போத்தலை உருவம் தவறென்று உள்ளதை காணாதே!!!

போத்தல்களின் நடனம்!

Image
ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர்! அப்போது தோன்றியது இப்படி…! திருமண வரவேற்ப்பு விழா மது அருந்திய சிலர் தமை மறந்து ஆடினர் அங்கு ஆடியவர்கள் மனிதர்களா? இல்லை அவர்கள் அருந்திய மதுப் போத்தில்கள்!

உடைந்த உள்ளம்!

வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்… சுற்றிலும் பல வண்ண மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறிய போதும் மகிழாத உள்ளம் உன் ஒற்றைச் சிரிப்பில் உடைந்து சிதறியது!

மகள்

மடிக் கணனி இருந்த இடத்தில் மகள்… மடிக் கணனி தொல்லைகள் தருவதில்லை இவளோ அழுது பின் சிரித்து இன்பத் தொல்லைகள் தருகிறாள்!

ஆடை களையும் நேரம்!

காலை நேரம். யன்னலூடாக வெளியே பார்க்கிறேன்.  பனி பொழிந்து காணுமிடமெங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது... சூரியன்  தன் கரங்களால் பூமிப் பெண்ணை உரசிப் பார்க்கிறான்... மெல்ல மெல்ல பனி கரைகிறது... அப்போது தோன்றியது இப்படி... விதவைக் கோலம் பூண்டுவிட்டாள் பூமிப்பெண் என்றெண்ணி ஆதவனும் மேலிருந்து பல்லிளித்தான்! அதற்கிசைந்து அவள் தன் வெள்ளை ஆடை மெல்ல மெல்ல களைகிறாள்!

உறங்கிய புற்கள்!

குளிர் காலம் ஏறத்தாழ தொடங்கி விட்டது. பனி பொழிவு தொடங்கி விட்டது. வெள்ளை நிறப் பூக்களை மேலே இருந்து யார் தான் சொரிகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வித ஆனந்தம்! பனி மூடிய புற்கள், வீதிகள் என்று எல்லாமே வெள்ளை நிறத்தில்… நமக்கு சும்மா இருக்குமா உள்ளம்…? எண்ணங்கள் எழுந்தாடும்… அப்போது கிறுக்கியது இது… (இவரும் இவற்ற கிறுக்கலும்…) குளிர் தாங்காது வெள்ளைக் கம்பளம் போர்த்தி உறங்கின புற்கள்!

கிடைத்த கடவுள்!

எங்கு தேடியும் அகப்படவில்லை கடவுள் கடைசியில் கூகிளில் தேடினேன்… குடும்பத்தோடு கிடைத்து விட்டார்!

வாழ்த்து!

இன்று தீபாவளி "Happy Deepawali" என அழகு தமிழில் தமிழர்கள் வாழ்த்தினார்கள்!

வழுக்கை…

Image
குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு… மரங்களுக்கு வழுக்கை விழுந்தால் மறுபடி முளைக்கும்! நமக்கு…? (விழுவதோடு சரி!)

இருகோடு.....

என்னில் இதயம் உன்னில் துடிப்பு என்னில் வேதனை உன்னில் கனவு என்னில் வறுமை உன்னில் கற்பனை நாமிருவர் ஒருவராவது எப்படியொன்றாள்!!! நன்றாய் கேளடிபெண்ணே!! உன்னில் நான் கண்டது அன்னையின் பாசம் என்னை மட்டுமே மகிழ்வித்து எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம் என் உணர்வின் மகிழ்ச்சி அவள் உணர்வோ என் உணர்வு ஆனதால் உனக்கும் வேண்டாம் தனியுணர்வு என்றேன்......... சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது இன்னும் புரியவில்லை

துறவு!

Image
துறவு பூண்டு விட்டனவோ? காவி உடையில் மரங்கள்!

சுமை

உனக்கு நான் சுமையென்றாய் சரி என்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன் - ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவைத் தேடியதால் நான் சுமையான கதை! சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று!