விடுதலை!

ஒற்றைக் கால்
ஊன்றி
வான் நோக்கி
கைகள் கூப்பி
முழு முதல் தனை
முணு முணுத்து
முற்றும் திறக்க
முயன்று கொண்டிருந்தன
மரங்கள்!

விழுந்து கிடந்த 
இலைகளில்
விசும்பல் ஏதுமில்லை

மண் மீது விழுந்து
தொழுகின்றனவோ
யாம் அறியோம்!

Comments