விடுதலை!

ஒற்றைக் கால்
ஊன்றி
வான் நோக்கி
கைகள் கூப்பி
முழு முதல் தனை
முணு முணுத்து
முற்றும் திறக்க
முயன்று கொண்டிருந்தன
மரங்கள்!

விழுந்து கிடந்த 
இலைகளில்
விசும்பல் ஏதுமில்லை

மண் மீது விழுந்து
தொழுகின்றனவோ
யாம் அறியோம்!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை