உனக்கு நான் சுமையென்றாய் சரியென்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன்- ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவை தேடியதால் நான் சுமையான கதை சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று.......
மூன்று முடிச்சு போட்டதும் இப்படியிரு அப்படியிரு அதைவிடு இதைவிடுயென உனக்காய் என்னை மாற்றிய உன்னால்....... முப்பது வருடமாகியும் எனக்காய் ஒரு கெட்ட பழக்கம் கூட விட முடியவில்லையே.... ஏன்?
சத்தியம் சத்தியமென பிள்ளைமேல் சத்தியம் செய்தார் என் கணவர் சாயங்கால மதுக்கடை திறக்கும் வரை.. சத்தியம் செய்தவருக்கு தெரியாது நான் நம்பாத மனிதரே அவர் தான் என்ற உண்மை.....
தள்ளாடும் வயதிலும் பொல்லூன்றியபடி தோளில் துண்டோடு பல்லில்லாத வாய் திறந்து சிரித்து மறதி என்பது சற்றும் அற்ற என் அன்பு தாத்தா சென்றார் இளைஞர் சங்கத்துக்கு தலைவன் தானே என்ற பெருமிதத்தோடு.. பொறுப்போடு.. வியப்போடு நான்.!