பொறுப்பு..

தள்ளாடும் வயதிலும்
பொல்லூன்றியபடி
தோளில் துண்டோடு
பல்லில்லாத வாய்
திறந்து சிரித்து
மறதி என்பது

சற்றும் அற்ற
என் அன்பு தாத்தா
சென்றார்
இளைஞர் சங்கத்துக்கு
தலைவன் தானே என்ற
பெருமிதத்தோடு..

பொறுப்போடு..
வியப்போடு நான்.!

Comments

Popular posts from this blog

தேவதை!

கவிதை