பாதணி தந்த பாடம்

கடை கடையாக
ஏறி இறங்கிய போதும்
மனதுக்கு பிடித்தமான
பாதணி இல்லையே என
கலங்கியபடி வந்த என்னிடம்
பிச்சை கேட்டான்
இரு கால்களையும் இழந்து
கையூன்றி நடக்கும் ஒருவன்

Comments

உணமையான கவிதை

Popular posts from this blog

தேவதை!

கவிதை