Posts

கவிதை

 கற்பனை தந்தவள் மனைவியானால்  காதல் கற்பனையை சிறைபிடித்தது கணவனை போல்

தேவதை!

கண்ணுக்குத் தெரியாத தேவதை  கூடவே நடக்கிறது விழும் போது தூக்கி விடவும் அழும் போது கண்ணீர் துடைக்கவும்

நரை

வெள்ளை மையில் தலையில் கடவுள் எழுதிய கவிதை நரை!

நம் கையில்!

இதுவும் இன்னொரு  ஆண்டு தான்! வரமோ சாபமோ காலமது  தருவதில்லை... யாவும் எம் எண்ணத்தின் எதிரொலியாம்! 

விடுதலை!

ஒற்றைக் கால் ஊன்றி வான் நோக்கி கைகள் கூப்பி முழு முதல் தனை முணு முணுத்து முற்றும் திறக்க முயன்று கொண்டிருந்தன மரங்கள்! விழுந்து கிடந்த  இலைகளில் விசும்பல் ஏதுமில்லை மண் மீது விழுந்து தொழுகின்றனவோ யாம் அறியோம்!

நிம்மதி!

நீயே நிம்மதி என்றிருந்தேன்.  இன்று நீ இல்லாததால் நிம்மதியாய் இருக்கிறேன்!