உறங்கிய புற்கள்!

குளிர் காலம் ஏறத்தாழ தொடங்கி விட்டது. பனி பொழிவு தொடங்கி விட்டது. வெள்ளை நிறப் பூக்களை மேலே இருந்து யார் தான் சொரிகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வித ஆனந்தம்! பனி மூடிய புற்கள், வீதிகள் என்று எல்லாமே வெள்ளை நிறத்தில்…

நமக்கு சும்மா இருக்குமா உள்ளம்…? எண்ணங்கள் எழுந்தாடும்… அப்போது கிறுக்கியது இது… (இவரும் இவற்ற கிறுக்கலும்…)

குளிர் தாங்காது
வெள்ளைக் கம்பளம்
போர்த்தி உறங்கின
புற்கள்!

Comments

வித்தியாசமான சிந்தனை
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Popular posts from this blog

தேவதை!

கவிதை