Posts

Showing posts from 2012

உடைந்த உள்ளம்!

வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்… சுற்றிலும் பல வண்ண மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறிய போதும் மகிழாத உள்ளம் உன் ஒற்றைச் சிரிப்பில் உடைந்து சிதறியது!

மகள்

மடிக் கணனி இருந்த இடத்தில் மகள்… மடிக் கணனி தொல்லைகள் தருவதில்லை இவளோ அழுது பின் சிரித்து இன்பத் தொல்லைகள் தருகிறாள்!

ஆடை களையும் நேரம்!

காலை நேரம். யன்னலூடாக வெளியே பார்க்கிறேன்.  பனி பொழிந்து காணுமிடமெங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது... சூரியன்  தன் கரங்களால் பூமிப் பெண்ணை உரசிப் பார்க்கிறான்... மெல்ல மெல்ல பனி கரைகிறது... அப்போது தோன்றியது இப்படி... விதவைக் கோலம் பூண்டுவிட்டாள் பூமிப்பெண் என்றெண்ணி ஆதவனும் மேலிருந்து பல்லிளித்தான்! அதற்கிசைந்து அவள் தன் வெள்ளை ஆடை மெல்ல மெல்ல களைகிறாள்!

உறங்கிய புற்கள்!

குளிர் காலம் ஏறத்தாழ தொடங்கி விட்டது. பனி பொழிவு தொடங்கி விட்டது. வெள்ளை நிறப் பூக்களை மேலே இருந்து யார் தான் சொரிகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வித ஆனந்தம்! பனி மூடிய புற்கள், வீதிகள் என்று எல்லாமே வெள்ளை நிறத்தில்… நமக்கு சும்மா இருக்குமா உள்ளம்…? எண்ணங்கள் எழுந்தாடும்… அப்போது கிறுக்கியது இது… (இவரும் இவற்ற கிறுக்கலும்…) குளிர் தாங்காது வெள்ளைக் கம்பளம் போர்த்தி உறங்கின புற்கள்!

கிடைத்த கடவுள்!

எங்கு தேடியும் அகப்படவில்லை கடவுள் கடைசியில் கூகிளில் தேடினேன்… குடும்பத்தோடு கிடைத்து விட்டார்!

வாழ்த்து!

இன்று தீபாவளி "Happy Deepawali" என அழகு தமிழில் தமிழர்கள் வாழ்த்தினார்கள்!

வழுக்கை…

Image
குளிர் காலம். காலையில் வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். சாலையின் இருமருங்கிலும் நின்ற மரங்கள் இலைகளை இழந்த சந்தோசத்தில் பரவசப்பட்டன (உண்மையாவா?). அந்தக் கணம் இப்படித் தோன்றியது எனக்கு… மரங்களுக்கு வழுக்கை விழுந்தால் மறுபடி முளைக்கும்! நமக்கு…? (விழுவதோடு சரி!)