Posts

Showing posts from October, 2011

இருகோடு.....

என்னில் இதயம் உன்னில் துடிப்பு என்னில் வேதனை உன்னில் கனவு என்னில் வறுமை உன்னில் கற்பனை நாமிருவர் ஒருவராவது எப்படியொன்றாள்!!! நன்றாய் கேளடிபெண்ணே!! உன்னில் நான் கண்டது அன்னையின் பாசம் என்னை மட்டுமே மகிழ்வித்து எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம் என் உணர்வின் மகிழ்ச்சி அவள் உணர்வோ என் உணர்வு ஆனதால் உனக்கும் வேண்டாம் தனியுணர்வு என்றேன்......... சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது இன்னும் புரியவில்லை

துறவு!

Image
துறவு பூண்டு விட்டனவோ? காவி உடையில் மரங்கள்!

சுமை

உனக்கு நான் சுமையென்றாய் சரி என்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன் - ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவைத் தேடியதால் நான் சுமையான கதை! சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று!