Posts

Showing posts from June, 2009

மரம் சொன்ன பதில்!

அகண்டு கிளை பரப்பி உயர்ந்து வானை முத்தமிடும் தோரணையில் நின்ற மரங்களை நெருங்கிக் கேட்டேன்… ”யார் வருகைக்காக இந்த நிழற் குடை?” குனிந்து கிளைக் கரம் தோழிற் போட்டு மரமொன்று பதில் சொன்னது! “நாங்கள் மனிதர்கள் அல்ல பயன் கருதிக் காத்திருக்க…”

வேண்டாத கொலுசு!

கைப் பையில் கிடந்த கொலுசுகளைப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்தாள் போரில் கால்களை இழந்த சகோதரி!