அவன் நினைவுகளை கிறுக்கி கிறுக்கி! உன்னைக் குப்பைத் தொட்டியில் நான் போட..... அவனே! நான் கிறுக்கிய உன்னைச் சேகரித்து சேகரித்து என்னை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டான்....
உனக்கு நான் சுமையென்றாய் சரியென்றேன் என்னால் வாழ்வே சுமையென்றாய் பிரிந்து போனேன்- ஆனால் இப்போது தான் புரிந்தது இன்னெரு உறவை தேடியதால் நான் சுமையான கதை சரி அவளையாவது சுமையென விரட்டாது காப்பாற்று.......
மூன்று முடிச்சு போட்டதும் இப்படியிரு அப்படியிரு அதைவிடு இதைவிடுயென உனக்காய் என்னை மாற்றிய உன்னால்....... முப்பது வருடமாகியும் எனக்காய் ஒரு கெட்ட பழக்கம் கூட விட முடியவில்லையே.... ஏன்?
சத்தியம் சத்தியமென பிள்ளைமேல் சத்தியம் செய்தார் என் கணவர் சாயங்கால மதுக்கடை திறக்கும் வரை.. சத்தியம் செய்தவருக்கு தெரியாது நான் நம்பாத மனிதரே அவர் தான் என்ற உண்மை.....
தள்ளாடும் வயதிலும் பொல்லூன்றியபடி தோளில் துண்டோடு பல்லில்லாத வாய் திறந்து சிரித்து மறதி என்பது சற்றும் அற்ற என் அன்பு தாத்தா சென்றார் இளைஞர் சங்கத்துக்கு தலைவன் தானே என்ற பெருமிதத்தோடு.. பொறுப்போடு.. வியப்போடு நான்.!
என் காதலி அணிந்துவிட்ட தங்கச் சங்கிலி அடிக்கடி கழுத்தை உரசும் போதெல்லாம் அவள் நினைவு வந்தது! இப்போது புரிந்ததா அவள் தங்கச் சங்கிலி அணிந்துவிட்ட மர்மம்!
விண்ணகத்தில் இந்திர சபையில் நடந்த விழாவொன்றில் நிலவுக்கு உவமையாக உன் பெயரை சிபாரிசு செய்ததாக சொல்கிறாயே... சத்தியமாக அது நான் இல்லை! மேனகை, ஊர்வசி இன்னும் பலரைப் பழிவாங்க யாரோ ஒரு புலவன் செய்த சதி அது!
முண்டியடித்து அதிக பணம் கொடுத்து சினிமாப் படம் பார்க்கச் சென்றவன் பாதியில் கவலையோடு வீடு வந்தான் என்னப்பா என்றால் கவர்ச்சி நாயகி பட்டிக் காட்டு வேடத்தில் வந்து விட்டாள் என்றான்...
இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்..
அன்பான காதலனும் ஆசைக் காதலியும் ஈருடலும் ஓருயிருமாக ஒன்றி இருந்த போதிலும் இரவில் படுக்கையை இரு வேறாக பகிர்ந்தாள் காதலி காதலனின் குறட்டை அவளின் தூக்கத்தை கலைத்ததால்....
'எப்போது பார்த்தாலும் திட்டினால் ஏனடி சிரித்துக் கொண்டே போகின்றாய்' என்றால் 'எப்போதும் எனக்குள் நீ இருப்பதாக நீங்கள் தானே சொன்னீர்கள்' என்கின்றாள் எனைப் பார்த்து...
பரீட்சை முடிந்தது அப்பா சொன்னார் உயர்தர படிப்புக்கு கணிதப்பிரிவை தேர்ந்தெடு என அம்மாவோ மருத்துவத்துறைக்குள் நுழையணும் என மனதார சொன்னாள் அவர்களுக்கு தெரியுமா பரீட்சை என சொல்லிவிட்டு சென்ற ஊதாரி நான் போக்கிரி படம் பார்த்துவிட்டு பரீட்சைக்கு செல்லவில்லை என்பது